வால்பாறையில் இன்று கோடை விழா தொடக்கம் - 3 நாட்கள் நடக்கிறது!

வால்பாறையில் நடப்பாண்டு கோடை விழா இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழாவானது இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு கொடி ஏற்றி கோடை விழாவை துவக்கி வைத்தனர்.



கோடை விழா நடைபெறும் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவின் நுழைவாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜேர்பார், ரோஜா, டென் ரோ பியம், புளூடெய்சி, பல வண்ண கார்னேசன் உள்பட 6,500 மலர்களால் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 

இதில் செல்பி ஸ்பாட், வண்ணத்து பூச்சி, மிக்கி மவுஸ் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் 250 காய்கறிகள் மூலம் வரையாடு, கோடைவிழா சின்னமான இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 



சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு படகுசவாரி, சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி மற்றும் நகர மன்ற துணை தலைவர் செந்தில் குமார் ஆகியோர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.



பின்னர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர். 

மேலும் இங்கு வனத்துறை சார்பில் இயற்கை பொருட்களை கொண்ட அரங்கம் அமைத்து புலி, சிறுத்தை, போன்ற வன விலங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் பரதநாட்டியம், யோக நடனம், கரகாட்டம், காவடி ஆட்டம், படுகர் இன நடனம், முருகன் வள்ளி கும்மி பாட்டு, பழங்குடியினர் நடனம், வாத்தியம், காவல்துறையின் நாய்கள் சகாசம், நாய்கள் கண்காட்சி, டீ தூள் தயாரிப்பு போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கோடை விழாவின் நிறைவு நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...