கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், காவல்துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

கோவை துடியலூர் காவல் எல்லையில் இருந்து பிரித்து கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே காவல் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த புதிய காவல் நிலையத்தை தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி வைத்தும் தொடங்கி வைத்தார். 



தொடர்ந்து அங்குள்ள காவல் துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரேந்திரகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் குமார், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...