கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் - ஆட்சியர் துவங்கி வைத்தார்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்டந்தோறும் மஞ்சப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு அதனை உபயோகிப்பதற்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். 



இது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கோவையில் வைக்கப்பட்டுள்ள முதல் தானியங்கி இயந்திரமாகும். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் உட்பட 5 இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்த தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. 

இதுதவிர கோவை மாநகராட்சிக்கு 5 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 5 இயந்திரங்களை பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...