கோவை கிழக்கு மண்டலத்தில் தார்ச் சாலை, பள்ளி கட்டிட புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு!

கோ‌வை கிழக்கு மண்டலத்தில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பிட்டில்‌ நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை பணி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.



கோவை: கோவை கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.6க்குட்பட்ட வீரியம்பாளையம்‌ முதல்‌ அன்னை பிள்ளையார்‌ கோவில்‌ வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.300 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவது குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.20 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌



கருப்பராயம் பாளையம்‌ மாநகராட்சி நடுநிலை பள்ளியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகளையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் நேரு நகா்‌ மாநகராட்சி பள்ளியில்‌ பழுதடைந்த கழிவறைகளை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌, கட்டுமான‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளாருக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, வீரியம்பாளையம்‌ பகுதியில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கல்பனா, அப்பகுதியில்‌ தார்‌ சாலை மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பிடு தயாரிக்க பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...