மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

தொழிலாளர்களுக்கு எதிரான நிபந்தனைகளை கொண்ட உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திடும்படி கூறும் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து மதுக்கரையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கோவை: மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மதுக்கரை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு உறுதிமொழி பத்திரத்தை வழங்கி அதில் கையெழுத்திடும்படி தெரிவித்துள்ளனர். 



மொத்தம் 22 நிபந்தனைகளை கொண்ட அந்த உறுதிமொழி பத்திரத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளதாக கூறி அதில் கையெழுத்திட ஊழியர்கள் மறுத்துள்ளனர். ஆனால் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால் தான் வேலை செய்ய முடியும் என கூறியதால் நேற்று மதியம் முதல் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



நேற்று இரவு முழுவதும் அங்கேயே உணவு சாப்பிட்டு தூய்மை பணியாளர்கள் தங்கிய நிலையில், இரண்டாவது நாளாக மீண்டும் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...