போத்தனூர் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 471 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

போத்தனூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சாரமேடு பகுதியை சேர்ந்த அப்துல் கரீம்(45) என்பவரை கைது செய்த போலீசார், 471 கிலோ அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: போத்தனூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கரும்புக்கடை சாரமேடு ராஜீவ் நகரை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் அப்துல் கரீம்(45). இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் அவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போத்தனுர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது காரில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து காரில் இருந்த 471 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார். அப்துல்கரீமை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...