இடுவாய் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் உண்ணாவிரதம்!

பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமையவுள்ள அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் ஊருக்கு வெளியில் அரசு மதுபான கடை எண்:2300 இயங்கி வருகிறது. இந்த கடையை குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் புதிதாக கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

மதுபான கடைக்கு வரும் நபர்களால் அப்பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல அச்சமாக உள்ளது. விபத்துக்கள் அதிக அளவில் நடக்கிறது.



குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மதுபான கடையை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், குழந்தைகளுடன், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து, மதுக்கடையை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் கொண்டு வர வேண்டாம் என்ற பதாகைகளுடன் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

புதிதாக அமைக்கப்படவுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...