கோவை மேற்கு, மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், புனரமைப்பு பணிகள் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சியின் மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16க்கு உட்பட்ட அருள்‌ நகர்‌ பகுதியில்‌ ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌, மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார்.

பின்னர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளார்களுக்கு அறிவுரை வழங்கினார்‌. 



தொடர்ந்து, கோவை‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, மண்டலம்‌ வார்டு எண்‌.69க்கு உட்பட்ட ராமலிங்கம்‌ காலனி, பாரதி பூங்காவில்‌ புனரமைக்கப்பட உள்ள உடற்பயிற்சி கூடம்‌, நடைபாதை ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பூங்காவின்‌ மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்‌. 



பின்னர், கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.60க்கு உட்பட்ட ராமலிங்கம்‌ காலனி, பாரதி பூங்கா பகுதியில்‌ மக்கும்‌ கழிவுகள்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்‌.



கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.72-க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள மலர்‌ அங்காடி புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...