பல்லடம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயம்!

கோவையிலிருந்து திருமண நிகழ்வுக்காக கரூர் நோக்கி சென்ற கார் மீது பல்லடம் அடுத்த மாதப்பூர் என்ற இடத்தில் கேரளாவிற்கு சென்ற லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த மாதப்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லடம் அருகே இன்று காலை 10 மணி அளவில் கோவையில் இருந்து கரூர் நோக்கி திருமண நிகழ்விற்காக காரில் பயணித்த குடும்பத்தினர் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.



இந்நிலையில் கார், பல்லடம் அருகே மாதப்பூர் என்ற இடத்தில் சென்றபோது கரூரிலிருந்து கேரளாவிற்கு சென்ற லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மகாலட்சுமி(27), சோமுகுமார்(38), பிரனேஷ்(38), நித்திஷ்(11), க்ரிதீஷ்(11), மற்றும் சசிரேகா(57) ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். 



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் காவல்துறையினர் காயமடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறு பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 



விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் வரை சாலையின் நடுவே தடுப்புகள் வைக்காததே இந்த விபத்திற்கு காரணம் எனவும் அதிக அளவிலான விபத்துகளை தடுக்க சாலை நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...