பிழைப்பூதியம் வழங்கக்கோரி கோவையில் இளநிலை உதவியாளர் உண்ணாவிரதம்!

சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் இளநிலை உதவியாளர் சரவணகுமார், இடைநீக்கம் செய்யப்பட்டு பிழைப்பூதியம் பெற்று வந்த நிலையில், கடந்த 5 மாதமாக பிழைப்பூதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



கோவை: பிழைப்பூதியம் வழங்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சின்ன தடாகம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு பள்ளியில் சமச்சீர் அல்லாத புத்தகம் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டு தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து சரவணக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 2022 ஆம் ஆண்டு 50 சதவீதம் பிழைப்பு ஊதியம் பெற்று வந்தார். ஆனால் தற்பொழுது 2023 ஜனவரி முதல் இன்று வரை பிழைப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், கடந்த ஐந்து மாதம் பிழைப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...