கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பரபரப்பு!

சுந்தராபுரம் அருகேயுள்ள குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்த அப்துல் ஜபாரின் வீட்டிற்கு அடிக்கடி போலீஸ் வருவதால், வாடகை வீட்டு உரிமையாளர் காலி செய்ய சொன்னதால், மனமுடைந்த அப்துல் ஜபார், சாரதா மில் அருகேயுள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை போத்தனூர் அடுத்த குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (45). ஆட்டோ ஓட்டுனரான இவரது மகன் ஹாரூன் பாஷா (24) என்பவர் மீது ரேஷன் அரிசி கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இதனால் அடிக்கடி வழக்கு விசாரணைக்காக போலீசார் அப்துல் ஜபாரின் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது. போலீசார் அடிக்கடி வருவதால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். 

இதில் மனமுடைந்த அப்துல் ஜபார் சுந்தராபுரம் சாரதா மில் சந்திப்பில் உள்ள செந்தில்குமார் என்பரது வீட்டின் மேலே இருந்த செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். 

தகவல் அறிந்து வந்த போத்தனூர் உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ், ஜபாருடன் நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்து அவரை கீழே இறக்கி, எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...