சூலூர் அருகே மதுபான கூடத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடம் முறையான அனுமதியின்றியும், 24 மணி நேரமும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதால், அதனை பூட்டி சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மகளிரணி சார்பில் மதுபான கூடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுற்றுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் சட்டவிரோதமாக 24 மணிநேரமு செயல்பட்டு வருவதாக கூறி மதுபான கூடம் முன்பு பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் கருமத்தம்பட்டி பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். 

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூடத்தை ஆய்வு செய்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...