மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றசாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும் கோவையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களான ஐ என் டி யு சி, ஏ ஐ டி யு சி, ஹெச் எம் எஸ், சி ஐ டி யு, எம் எல் எப், எஸ் டி டி யு, எம் எல் எப் போன்ற அமைப்புகளின் சார்பில் பாஜக எம்.பியான பிரிஜ் பூசன் சரண்சிங்- ஐ கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் என்ற பதவியை அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகளை டெல்லி காவல்துறையினர் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. 



அமைதியான முறையில் போராட்டம் நடத்திய வீரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.

கோவையில் உள்ள தொழிற்சங்கங்கள் சார்பில் மல்யுத்த வீரர்களுக்கான போராட்டத்தில் தொடர் பங்களிக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...