கோவையில் அனுமதியற்ற 185 விளம்பர பலகைகள் அகற்றம்!

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 185 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக, சமீபத்தில் கருமத்தம்பட்டியில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 185 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பு, காவல்துறையினர் இணைந்து அகற்ற தனிக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தெக்கலூர் அடுத்த நீலாம்பூர் சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற காவல்துறையினர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே கருமத்தம்பட்டி அருகே இரும்பு கம்பம் சரிந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும், நில உரிமையாளர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கும் பட்சத்தில் நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தினர் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...