கோவையில் கஞ்சா விற்பனை - கேரளாவை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது!

கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர்களான எம். அர்ஜூன் (21), வி. அர்ஜூன் (22), அக்சய் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் நவக்கரை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி போலீசார் நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று கஞ்சா எப்படி கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2ஆம் ஆண்டு படிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (22) என்பவர், திருச்சூர் பேருந்து நிலையம் சென்று வினித் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி வந்து உடன் படிக்கும் நண்பர்கள் உதவியுடன் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அறையில் இருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த திருச்சூரை சேர்ந்த எம். அர்ஜூன் (21), எர்ணாகுளத்தை சேர்ந்த வி. அர்ஜூன் (22), திருச்சூரை சேர்ந்த அக்சய் (22) ஆகியோரை கைது செய்தனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...