ஈச்சனாரி அருகே இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சோகம்!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற நர்சிங் கல்லூரி மாணவர், தனது நண்பருடன் பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கோவில்பட்டி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆண்டவர் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (21). இவர் ஈச்சனாரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இவரது அறையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (18). என்பவரும் தங்கி அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அறையில் இருந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆகாஷ் இருவரும் அவரது நண்பர்களான ஆதித்யா என்பவரது இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, டீ குடிக்க மலுமிச்சம்பட்டி நோக்கி சென்றுள்ளனர். 



பின்னர் மீண்டும் அறைக்கு திரும்பி வந்த போது மலுமிச்சம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...