கோவையில் விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றம்!

கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறி 12 தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவல்துறையினர் அகற்றி பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி 12 தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவலர்கள் அகற்றி பறிமுதல் செய்தனர். 

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் “ஏர் ஹாரன்” பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. 

இதையடுத்து மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன் உத்தரவின் பேரில், கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பை தீவிரபடுத்தினர். 

இதில் போக்குவரத்து விதியை மீறி அதிக அளவு ஒலி எழுப்பக்கூடிய “ஏர் ஹாரன்களை” பொருத்திய பேருந்துகளை கண்டறிந்து அந்த பேருந்துகளில் பொருத்தி பொருத்தியுள்ள ஹாரன்களை அகற்றி வருகின்றனர். 



அதன்படி கோவை காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு வந்த தனியார் பேருந்துகளை சோதனை செய்தனர். 



அப்போது, 12 தனியார் பேருந்துகளில் பொருத்திருந்த “ஏர் ஹாரன்களை” அகற்றி பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இது குறித்து போலீசார் எச்சரித்திருந்த நிலையில் மீண்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தி பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்படும் எனவும் அதனை தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...