கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு - திட்டங்களையும் தொடங்கி வைத்தார்!

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை: கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழகம்‌ திட்டம்‌, பொதுமக்களின்‌ தூய்மை நகரம்‌ திட்டத்தின் கீழ்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்கும்‌ தலா 200 மரக்கன்றுகள்‌ வீதம்‌ 1000 மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ வழங்கினார்‌.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு 87க்கு உட்பட்ட புட்டுவிக்கி பிரதான சாலையில்‌ ரூ.186 லட்சம்‌ மதிப்பீட்டில் 2200 மீட்டர்‌ தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌,



இதேபோல், கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ பகுதியில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டுமான பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.100க்கு உட்பட்ட மேட்டூர்‌ சாலை, நாச்சிமுத்து கவுண்டர்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ |||-ன் கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 405 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...