பூரண மதுவிலக்கு கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க நாம் தமிழர் கட்சி முடிவு!

கோவை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர்‌ பாசறையின்‌ சார்பாக மனு கொடுக்க உள்ளதாக அறிவிப்பு.‌



கோவை: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 







பூரண மதுவிலக்கு என்பதை நாம்‌ தமிழர்‌ கட்சி கொள்கையாக‌ கொண்டுள்ளது. அதன்‌ அடிப்படையில்‌ வரும்‌ ஜூன் 12ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ பூரண மதுவிலக்கு கோரி, பொதுமக்களிடம்‌ கையெழுத்து பெற்று மகளிர்‌ பாசறையின்‌ சார்பாக மனு கொடுக்க உள்ளோம்‌.



எனவே தானியங்கி பிரச்சார வாகனம்‌ மூலம்‌ பொதுமக்களிடம்‌ கையெழுத்து பெற அனுமதி கொடுக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌. இதனால்‌ பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும்‌ வராது என்பதை உறுதீபட தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் இதுபோல வழிமுறையை பின்பற்றுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...