கோவை காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய மாணவி!

கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களை கண்ட ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் கோவை சேர்ந்த மாணவி, இந்த நூலகங்களுக்காக 200 புத்தகங்களை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கோடை விடுமுறைக்காக கோவை வந்துள்ள நிலையில், கோவை மாநகரக் காவல் துறை சார்பாக வைத்துள்ள தெருவோர நூலகங்களை பார்த்துள்ளார். 

இந்நிலையில் அந்த நூலகங்களுக்கு 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த புத்தகங்கள் தற்போது, தெருவோர நாலகங்கள் மற்றும் ஆட்டோ நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி ஏற்கனவே 12 வயதில் புத்தகங்களை வீடு வீடாக போய் சேகரித்து அந்த புத்தகங்களை நூலகங்கள் அமைப்பதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மாணவி புத்தகங்களை சேகரித்து நூலகங்களை அமைப்பதற்கு எடுத்த முயற்சிக்காக இந்தியா முழுவதும் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...