தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்!

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் கமலம் ரவி தொடங்கி வைத்தார்.



கோவை: தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தூய்மை பணி முகாம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நகர் முதல் வளையங்குட்டை வரையில் நடைபெற்ற இந்த முகாமில் பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தனர்.

குப்பையை தரம் பிரித்து கொடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து, நீர்நிலையின் கரைப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

தொடர்ந்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பேனர்களை அகற்றினர். அனுமதியின்றி கொட்டப்பட்ட கட்டுமான பொருட்களை, இடிப்பு கழிவுகளை அகற்றினர். பள்ளி கல்லூரிகளில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். 

இதனையடுத்து, தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமார் செய்திருந்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...