கோத்தகிரி மலை பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை!

கோத்தகிரி அடுத்த தட்டபள்ளம் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்று, சாலையில் சென்ற வாகனங்களுக்கு வழி விடாமல் உலா வந்ததால் சுமார் 2 மணி நேரமாக அதே இடத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.



நீலகிரி: கோத்தகிரி அருகே தட்ட பள்ளம் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் மலைப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.

மலைப் பகுதிகளில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களில் யானை கூட்டங்கள் முகாமிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலை பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பகல் நேரங்களில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை நேற்று இரவு மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தட்டப்பள்ளம் மலைப்பாதையில் சுற்றி திரிந்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே அங்கும் இங்குமாக உலா வந்து காட்டு யானை வாகனங்கள் செல்ல வழி விடாமல் நீண்ட நேரம் சாலையிலேயே நின்றது. 

இதன் காரணமாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

ஒற்றை காட்டு யானை நீண்ட நேரம் சுற்றி திரிந்த தால் வாகன ஓட்டிகள் என்ன செய்வதென்று தெரியாமல் வாகனத்தி லேயே 2 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

எனவே தொடர்ந்து தட்டப்பள்ளம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவது வாடிக்கையாக இருக்கும் நிலையில் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...