பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு சரக்கு ஆட்டோ மூலம் கடத்த முயன்ற, 1,150 கிலோ அளவிலான ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சரக்கு ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி - தாவளம் சாலை ராமபட்டணம் சிவன் கோவில் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அதில், தமிழக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, 50 கிலோ எடை கொண்ட, 23 மூட்டைகளில் மொத்தம், 1,150 கிலோ இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த பாலக்காடு மூலத்துறை பள்ளிவாசல் வீதியை சேர்ந்த காதர் பாஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், பொள்ளாச்சி மாப்பிள்ளை கவுண்டன் புதுாரை சேர்ந்த சாதிக் அலி மற்றும் அஜித் ஆகியோர், மண்ணுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் கொழிஞ்சாம்பாறை தவ்பிக்கிடம் கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருமாறு கூறியது தெரிய வந்தது.

இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, கார் மற்றும் இரண்டு மொபட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், காதர்பாஷாவை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சாதிக் அலி, அஜித், தவ்பிக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...