திருப்பூர் அருகே நிலத்தடி நீரில் சாயக்கழிவு கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் அடுத்த சொர்ணபுரி கார்டன் பகுதியில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரில் சாய கழிவுகள் கலந்து நிறம் மாறி வருவதாக கூறி, அப்பகுதி மக்கள் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த சொர்ணபுரி கார்டன் பகுதியில் நிலத்தடி நீரில் சாயக்கழிவு கலந்து. தண்ணீர் நிறம் மாறி வருவதாக பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் சொர்ணபுரி கார்டன் பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சுற்றிலும் ஏராளமான சாய ஆலைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது. 

அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் தோல் அரிப்பு போன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் கெடும் வகையில் சாய ஆலைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, வருங்கால சந்ததியை பாதிக்கும் வகையில் நிலத்தடிநீரை கழிவாக மாற்றிய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்நிலையில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மாசடைந்த நிலத்தடி நீரையும் பாட்டிலில் அடைத்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...