திருப்பூர் மருத்துவமனை தேவைகள் குறித்து துணை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

பல்லடம் - திருச்சி ரோடு வனாலயம் அடிகளார் அரங்கத்தில் அரசு மருத்துவமனைக்கான தேவைகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மருத்துவமனைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி அளிப்பதாக தொழில் துறையினர், தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்படி, துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில், ஆலோசனை கூட்டம் பல்லடம் - திருச்சி ரோடு வனாலயம் அடிகளார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தொழில் துறையினர், தன்னார்வலர்கள், அரசு மருத்துவர்கள், மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அரசு மருத்துவர்கள் மருத்துவமனையின் தேவைகள், பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்தினர். இதை கேட்டறிந்த துணை ஆட்சியர், தன்னார்வலர்கள், தொழில் துறையினருடன் இது குறித்து ஆலோசித்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் நீண்ட நாட்களாக தேவைப்படும் 'ப்ரீசர் பாக்ஸ்'க்காக பத்து லட்சம் ரூபாய் வழங்க, கோடங்கிபாளையம் மற்றும் 63 வேலம்பாளையம் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முன்வந்தனர். 

இதேபோல், மருத்துவமனையின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற கறிக்கோழி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் தீர்மானித்தனர்.



இந்த நிகழ்வில் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கல்குவாரி உரிமையாளர்கள் சிவகுமார் சோமசுந்தரம் ஜவுளி உற்பத்தியாளர் முருகன், கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சுவாதி கண்ணன் மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள் சுந்தரராஜ் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...