கோவையில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு!

கோவையில் இன்று ஒன்று முதல் 5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு பிடித்த மிக்கி மவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடமணிந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர்களுக்கு மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 



தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் வகுப்புகள் துவங்கியது. அதன்படி கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளில் சில குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவதற்கு அடம் பிடிப்பர். 



இந்நிலையில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும் உற்சாக இமோஜி வரைபடங்களை கொண்டும் இனிப்புகள் வழங்கி குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். 



இதனால் குழந்தைகளும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். 



மேலும் முதல் நாள் என்பதால் பெற்றோர்களும் பள்ளிகளுக்கு வந்து மாணவர்களை பள்ளியில் விட்டு சென்றனர். 



ஆசியரியர்களும் குழந்தைகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...