வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை - கோவையில் பரபரப்பு!

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறை வாகனத்தை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வனத்துறை ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே முகாமிட்டுள்ள யானையை விரட்ட சென்ற வனத்துறையினரின் வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட ஆலாந்துறை அடுத்த கரடிமடை, நரசிபுரம் வழியாக ஒற்றை காட்டு யானை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல தனது வலசை பாதையில் சென்ற ஒற்றை காட்டு யானை ஆலாந்துறை முகாசிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்ததாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு வனத்துறையினர் விரைந்து சென்று டார்ச் விளக்கும், மற்றும் ரோந்து வாகனம் மூலம் கண்காணித்தனர். 



அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெளியே வந்த காட்டு யானை அங்கு வந்த வனத்துறையினர் வாகனத்தை சேதப்படுத்தியது. 



இதில் வனத்துறையினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், வாகனத்தை விட்டு வெளியேறி தப்பிச்சென்ற வனத்துறையினர் மீண்டும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஒற்றை காட்டு யானை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. பலத்த சேதமடைந்த வனத்துறையினர் வாகனம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...