கோவையில் தொடர்ந்து ஆன்லைன் முதலீட்டில் ஏமாறும் பட்டதாரிகள் - ரூ.22 லட்சம் இழந்த பெண்!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த லத்திகா லட்சுமி என்ற பெண்ணிடம் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைகாட்டி ரூ.22 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் மர்மகும்பலை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே ஆன்லைனில் 22 லட்சம் பணத்தை இழந்த பட்டதாரி பெண் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி லத்திகா லட்சுமி (29). பி.காம் பட்டதாரியான இவர், வீட்டிலிருந்தபடியே கணக்காளராக வேலை செய்து வருகிறார். 

இவரது செல்போனில் வாட்ஸ்-அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் டாஸ்க்குகளை முடித்தால், ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளனர். பின்னர், லத்திகா லட்சுமியை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் லிங்க் மூலம் சென்று யூடியூப் வீடியோவை பார்த்து லைக் கொடுத்தால் போதும் வருமானம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனை நம்பி லத்திகா வீடியோவிற்கு லைக் கொடுத்தார். பின்னர், டெலிகிராம் லிங்க் மூலம் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ய கூறினர். லத்திகா லட்சுமி ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.14 ஆயிரம் வருமானம் கிடைத்தது. பின்னர், ரூ.60 ஆயிரம் முதலீடு செய்து ரூ.90 ஆயிரம் பெற்றார். 

இதையடுத்து, ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வி.ஐ.பி உறுப்பினராக முடியும் எனவும், ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ஒரு புள்ளி அளிக்கப்பட்டு கூடுதல் வருமானம் கிடைக்கும் என கூறினர். 

இதனை நம்பி லத்திகா லட்சுமி ரூ.22 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லத்திகா லட்சுமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...