'நமது வார்டும் நமது வீடே' 27வது வார்டில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை


'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27வது வார்டு, சின்னவேடம்பட்டியில் நம் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டத்தை மண்டல சுகாதார அலுவலர் அருணகிரி தலைமையில் இன்று காலை 8:30 மணியளவில் துவங்கியது.



இதில் சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். 



இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு நிகழ்ச்சி இனிதே துவங்கியது.



இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், நமது வார்டும் நமது வீடே என்ற தலைப்பின் முக்கிய நோக்கமாக இன்றைய காலகட்டத்தில் நிலமும், நீரும், காற்றும் மசுபட்டு வருவதால் நமது குழந்தை மற்றும் சந்ததிகளின் உடல் நலமும், எதிர்காலமும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுநல மனப்பான்மையுடன் நாம் ஒன்றிணைந்து வாரம் ஒரு மணிநேரம் நமது வார்டில் சேவை செய்வதன் மூலம் நம் சந்ததிகளின் காலமும் பொற்காலமாகும் என்பதற்காகவே வாரம் ஒரு மணிநேரம் சேவை பொது நல திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.



அதில் 27-வது வார்டு சின்னவேடம்பட்டி பகுதியில் இந்த பொதுநல திட்டத்தின் மூலம் மற்ற வார்டுகளுக்கும் இத்திட்டம் முன்மாதிரியாக விளங்குகிறது. தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து விழாவில் பங்கேற்ற பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது என்றனர்.



Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...