செந்தில்பாலாஜி கைதும்‌, சிகிச்சையும்‌ - அமலாக்கத்துறை வழக்கறிஞர்‌ ரமேஷ்‌ கூறுவது என்ன?

அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞரான ரமேஷ், செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும் மறுத்ததன் காரணமாகவே கைது செய்யும் சூழலுக்கு அமலாக்கத்துறை தள்ளப்பட்டது என தெரிவித்தார்.



சென்னை: விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும்‌ செந்தில்பாலாஜி மறுத்ததாக அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

அமைச்சர்‌ செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர்‌ என்‌.ரமேஷ்‌ செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்‌சர்‌ செந்தில்பாலாஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும்‌ மறுத்தார்‌.

அதிகாரிகளிடம்‌ ஒத்துழைக்கவில்லை இதனால்‌, செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டிய நிலைக்கு அமலாக்கத்துறை தள்ளப்பட்டது. ஆனால்‌, கைது செய்ய போகிறோம்‌ என்றதும்‌ செந்தில்பாலாஜி அழ ஆரம்பித்துவிட்டார்‌. தரையில்‌ புரண்டு நெஞ்சுவலிப்பதாக கதறினார்‌. எனவே, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள்‌ அழைத்‌துச்‌ சென்றனர்‌.

மருத்துவர்கள்‌ பரிசோதனை செய்துவிட்டு, அவரின்‌ உடல்நலம்‌ நல்ல நிலையில்‌ இருக்கிறது. அவர்‌ பயப்படுவதாலும்‌, பதட்டமடைவதாலும்‌ ரத்த அழுத்தம்‌ அதிகமாக உள்ளது என்றனர்‌. ஆனால்‌, இன்று (நேற்று) காலையில்‌ சூழ்நிலை மாறி, செந்தில்பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைகள்‌ செய்‌யப்படுகிறது. அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறப்பட்டது. 

இதனால்‌, மத்திய அரசின்‌ இஎஸ்‌ஐ மருத்‌துவமனையில்‌ இருந்து மருத்துவர்கள்‌ குழு வந்து, செந்தில்‌ பாலாஜியை பரிசோதித்தனர்‌. அவர்கள்‌, செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து வேறுவிதமாக கருத்து தெரிவித்தனர்‌. நீதிபதி மருத்துவமனைக்கு வந்து செந்தில்‌ பாலாஜியிடம்‌ விசாரித்தார்‌. அப்போது செந்தில்பாலாஜி இயல்பாக பேசினார்‌.

அமலாக்கத்துறை அதிகாரிகள்‌ தன்னை துன்புறுத்தியதாக கூறினார்‌. அப்போது நீதிபதி, உங்களை எந்த வழக்கில்‌ கைது செய்துள்ளனர்‌ என்று தெரியுமா?'' என்று கேட்டபோது. அவர்‌, தெரியும்‌. அமலாக்கத்துறை அதிகாரிகள்‌ சம்மன்‌ கொடுத்ததாக கூறினார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...