கோவை குற்றாலம் அருகே சாலையோர கடை மீது வேன் மோதி விபத்து - பழங்குடியின முதியவர் பலியான சோகம்!

விருதுநகரில் இருந்து கோவை குற்றாலம் நோக்கி வந்த மினிவேன் ஒன்று, கோவை குற்றாலம் சோதனை சாவடி அருகேயுள்ள கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கடையில் பொருட்களை வாங்கிய வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தை ரங்கன் என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: கோவை குற்றாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர கடையின் மீது மோதிய விபத்தில் பழங்குடி கிராம முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சாடிவயல், வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் ரங்கன் (66). கூலி வேலை செய்து வந்த இவர் கோவை குற்றாலம் சோதனைச் சாவடி அருகேயுள்ள ரங்கராஜ் என்பவரது கடையில் பொருட்களை வாங்கச் சென்றார். 



பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்த போது, அவ்வழியாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கோவை குற்றாலத்திற்கு வந்த மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரங்கராஜ் கடையின் முன் பகுதியில் மோதி விட்டு அருகே நின்றுகொண்டிருந்த ரங்கன் மீது மோதியது. 



இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கன் படுகாயமடைந்தார். 



இதையடுத்து அங்கு இருந்தவர்கள் ரங்கனை மீட்டு அருகே உள்ள காருண்யா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 

அங்கிருந்த மருத்துவர்கள் ரங்கன் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரங்கன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காருண்யா நகர் போலீசார், மினி வேன் ஓட்டுநரான விருதுநகர் செட்டிகுறிச்சியை சேர்ந்த விஜய் (24) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆதரவற்ற தனது 18 வயது பேத்தியை கவனித்து வந்த ரங்கன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...