கோவை அருகே கண்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சோகம்!

கோவை எல்.அன்.டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தருணன் (21) என்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை எல்.அன்.டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வரதராஜபுரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் பூபாலகிருஷ்ணன் என்பவரது மகன் தருணன் (21). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தருணன் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எல் அண்ட் டி பைபாஸ் ஜல்லிக்கட்டு மைதானம் அருகே வந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தருணன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அப்போது, அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு புலனாய்வு போலீசார் கண்டெய்னர் லாரி ஓட்டுனரான சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (42), என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...