துடியலூர் சூழாத்தம்மன் கோவிலில் 7 ஆம் ஆண்டு திருவிழா கோலாகலம்!

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி சூழாத்தம்மன் திருக்கோவில் 7ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் பராசக்தியாகம், சிறப்பு அலங்கார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள தொப்பம்பட்டி சூழாத்தம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் ஸ்ரீ சூழாத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 7ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் அம்மனுக்கு பராசக்தியாகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



இதன் முதல் நிகழ்வாக ஸ்ரீ விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி, விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாக வாஜசன், பஞ்ச கவ்ய பூஜை சந்த்கல்பம், கிச்சா சக்தி, ஞானசக்தி, மூல மந்திரம், மாலா மந்திர ஹோமம், மகா பூர்ணாவதி தீபாரதனையை தொடர்ந்து அம்மனுக்கு 11 விதமான அபிஷேகமும், கலச அபிஷேக அலங்கார அர்ச்சனை மகா தீபாரதனை நடைபெற்றது.



தொடர்ந்து பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...