வால்பாறையில் தனியார் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!

வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர் கையில் கொடி ஏந்தி எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர் கையில் கொடி ஏந்தி எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், எஸ்டேட் தொழிலாளர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பட்டர் ஃப்ரூட் மரங்களில் உள்ள பழங்களை தொழிலாளர்கள் பறித்து உபயோகம் செய்ய விடாமல், எஸ்டேட் நிர்வாகம் பறித்து விற்பனை செய்து வருகிறது. இதை கைவிட வேண்டும்.

தேயிலை காடுகளில் தேயிலைச் செடிகளை மூடி கிடக்கும் செடி, கொடிகள் மற்றும் கலைகளை அகற்றி பவுண்டரி லைன் மற்றும் வெட்டுச்சால் வெட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பு சம்பளத்தை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தொழிலாளர்கள் குடியிருப்புகளில் குடியிருப்புடன் இணைந்த கழிவறை வசதி செய்து தர வேண்டும். மரத்தாலான தடுப்புகளுக்கு பதிலாக கான்கிரீட் சுவர் கட்டித் தர வேண்டும்.



வெள்ளைமலை டாப் டிவிஷன் சூப்பர்வைசர் தினசரி ஆள் கணக்கு பட்டியலில் வேலைக்கு வராத தொழிலாளர்களின் பெயர்களை தினசரி திருட்டுப் பெயர் போட சொல்லி உழைப்பு சுரண்டல் செய்யும் விஜயன் மற்றும் லியோவை கம்பெனியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சமலை வடக்கு டிவிஷனில் பி.கே.டி கம்பெனியில் பணம் இல்லை ஒப்பந்தம் அடிப்படையில் இன்சென்டிவ் கொழுந்து பறித்து கொடுங்கள் நான்கு ரூபாய் உங்களுக்கு ஒரு ரூபாய் எங்களுக்கு என்று கம்பெனியை பெயரை சொல்லி தொழிலாளர்களிடம் பேசி உழைப்பு சுரண்டலில் ஈடுபட்டு காண்டிராக்டராக நடந்து கொண்டிருக்கும் விஜயன் மற்றும் சிவா கம்பெனியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி சங்கத் தலைவர் வீரமணி மற்றும் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் எஸ்டேட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...