பல்லடத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிரான தொடர் போராட்டம் - 97 வது நாளை எட்டியது!

பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை அகற்றக்கோரி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 97வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வரும் இரும்பு உருக்காலையை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் 97வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லடம் அடுத்த அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பழைய இரும்பு பொருட்களை உருக்கும் கிஸ்கால் என்ற இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.



இந்த இரும்பு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் கடந்த 97 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் பல்லடம் வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆலை முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக கிராம மக்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆலையை தற்காலிகமாக மூடக்கோரி பல்லடம் வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.



இந்நிலையில் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதாகவும் நீர்நிலைகள் மாசு அடைவதால் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 97 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் சில நாட்கள் ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அனைத்து அனுமதிகளும் பெற்றுவிட்டதாக கூறி ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தில் கட்டிட அனுமதி பெறாமல் ஆலை இயங்குவதால் அனுப்பட்டி ஊராட்சி சார்பில் ஆலையின் கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் அளித்த உத்தரவு ஆணையை ஏற்காமல் ஆலை மீண்டும் செயல்பட்டு வருகிறது.



இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனுப்பட்டி, பணிக்கம்பட்டி, ஆறாகுளம், அய்யம்பாளையம், புளியம்பட்டி, கரடிவாவி ஆகிய கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 400க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது,



97 நாட்களாக தொடரும் பொதுமக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிஸ்கால் இரும்பு உருக்கு ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் சட்ட விரோதமாக செயல்படும் ஆலைக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...