6 வருடங்களுக்கு முன் விற்ற சொத்திற்கு முழு பணம் தராத அதிமுக பிரமுகர் - மாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை தர்ணா!

கோவையில் 6 வருடங்களுக்கு முன்பு சொத்தை வாங்கிய அதிமுக நிர்வாகி புனிதா நாகராஜ் என்பவர் முழு பணத்தையும் கொடுக்காமல் உள்ளதாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சேகர் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை: கோவை அருகே சொத்தை வாங்கிய அதிமுக பிரமுகர் முழுமையான பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் இன்று அவரது மாற்றுத்திறனாளி மகன், உட்பட இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தீடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார்.



இது குறித்து அவர் கூறியதாவது, தனது தாயார் சொத்தை கடந்த 6 வருடங்களுக்கு முன் அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜ் என்பவருக்கு விற்பனை செய்தார்.

விற்பனை செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டும் தனக்கும் சகோதர சகோதரிக்கும் கொடுத்து விட்டு மீதமுள்ள 50,000 ரூபாயை புனிதா நாகராஜ் தராமல் இருக்கிறார்.

தற்போது தாயார் இறந்த நிலையில், மீதமுள்ள பணம் குறித்து கேட்டால் இழிவாக பேசுவதாகவும் பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார். மேலும் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கி அதிமுகவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் இருக்கும் வீட்டை காலி செய்ய வைப்பதாகவும் எங்கு சென்றாலும் தங்களை பற்றி குற்றம் கூறி அவப்பெயரை உண்டாக்குகிறார்.

மேலும் தன்னை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் தங்கள் மீது புகார் தெரிவித்து தன்னை கைது செய்ய முயன்றார். எனவே நானும் குடும்பத்தினரும் என்ன செய்வதென்றே தெரியாமல் நிர்கதியாய் நிற்கிறோம்.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜிடம் இருந்து பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...