ஆனைகட்டி அருகே உயிரிழந்த யானைக்கு நுரையீரல் பிரச்சனை - உடற்கூறு ஆய்வில் தகவல்!

கோவை ஆனைகட்டி அடுத்த தூமனூர் வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டி.என்.ஏ பரிசோதனைக்காக யானையின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.


கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே தூமனூர் வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவை வனச்சரகம் ஆனைகட்டி அடுத்த தூமனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காப்பு காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் இறந்த பெண் யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனையால் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.

மேலும் இறந்த பெண் யானைக்கு சுமார் 26 முதல் 29 வயது இருக்கும் என்றும், இறைப்பை மற்றும் சிறு குடலில் உணவு ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.

இதன் மூலம் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட யானை சில நாட்களாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும் இதயமும் வீக்கமடைத்த நிலையில் உயிரிழந்துள்ளது.

கூடுதல் டி.என்.ஏ பரிசோதனைக்காக யானையின் குறுந்தந்தங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...