முதல்வர் மற்றும் பெரியார் குறித்து அவதூறு பரப்பிய பாஜக பெண் பிரமுகர் கைது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெரியார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்க்கி கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது திமுக ஐடி விங் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழக முதல்வர் மற்றும் தந்தை பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் ஆதரவாளரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்க்கி என்பவர், தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியார் மற்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் திமுக ஐடி விங்கை சேர்ந்த ஹரீஸ் என்பவர் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



விசாரணையில் சிக்கியுள்ள பாஜக பெண் ஆதரவாளர் உமா கார்க்கிக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு சமூக செயல்பாட்டாளருக்கான விருது வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் உமா கார்க்கி அன்மையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கரை படிக்க அறிவுறுத்தியதை மேற்கோள் காட்டியும் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக கருத்துகளை வெளியிட்டுள்ளது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...