சர்வதேச யோகா தினம் - ஈஷாவின் ஆதியோகி சிலை முன்பு யோகா செய்து அசத்திய சி.ஆர்‌.பி.எப்‌ வீரர்கள்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ கோவையின் பல்வேறு இடங்களில்‌ சிறப்பு யோகா நிகழ்ச்சிகள்‌ இலவசமாக நடத்தப்பட்டன. இதில்‌ ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ நூற்றுக்கணக்கான சி.ஆர்‌.பி.எப்‌ வீரர்கள்‌ பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.



கோவை: சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை ஈஷாவின் ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ நூற்றுக்கணக்கான சி.ஆர்‌.பி.எப்‌ வீரர்கள்‌ பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். 

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன்‌ 21) ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ கோவை விமான நிலையம்‌, ஆதியோகி, சூலூர்‌ விமான படை தளம்‌ உள்ளிட்ட பல்வேறு இடங்களில்‌ சிறப்பு யோகா நிகழ்ச்சிகள்‌ இலவசமாக நடத்தப்பட்டன. இதில்‌ ஆயிரக்கணக்கானோர்‌ பங்கேற்று பயன்பெற்றனர்‌.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, விமான நிலையத்தின்‌ இயக்குநர்‌ செந்தில்‌ வளவன்‌ சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்‌. இதை தொடர்ந்து காலை 7 மணி முதல்‌ மாலை 6 மணி வரை பயணிகளுக்கென தனியாக யோகா வகுப்புகள்‌ நடைபெற்று வருகின்றன.

ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ நூற்றுக்கணக்கான சி.ஆர்‌.பி.எப்‌ வீரர்கள்‌ பங்கேற்று யோகா கற்றுக்கொண்டனர்‌. அதேபோல்‌, ஐ.என்‌.எஸ்‌ அக்ரானி, விமான படை கல்லூரி, வெள்ளலூரில்‌ உள்ள சிறப்பு அதிரடிப்‌ படை வளாகம்‌ போன்ற இடங்களில்‌ பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.

இதுதவிர, கற்பகம்‌ கல்லூரி, இந்துஸ்தான்‌ கலை கல்லூரி, எஸ்‌.என்‌.எஸ்‌ பொறியியல்‌ கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில்‌ ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில்‌ சத்குருவால்‌ வடிவமைக்கப்பட்ட யோக நமஸ்காரம்‌, நாடி சுத்தி போன்ற பயிற்சிகள்‌ கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன்‌ மூலம்‌ முதுகு தண்டும்‌, நரம்பு மண்டலமும்‌ வலுபெறும்‌. மன அழுத்தம்‌ குறையும்‌, உடல்‌ மற்றும்‌ மன நலன்‌ மேம்படும்‌.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன்‌ 1-ம்‌ தேதி முதல்‌ கோவையில்‌ பல்வேறு இடங்களில்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள்‌ Isha.co/idysessionrequest என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. ஆன்லைன்‌ வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...