ரூ.50 துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றியிருப்பதே திமுக ஆட்சியின் நேர்மை நிர்வாகத்திற்கு உதாரணம்!

திருப்பூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என கூறினார்.



திருப்பூர்: ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 



விலைவாசி உயர்வு மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதில் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 



ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, 







தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் மூலம் அரசு ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் ஊழல் செய்து வருகிறது. பாட்டில் முதல் டம்ளர் வரை அனைத்திலும் ஊழல் செய்யும் திமுக அரசை மக்கள் அப்புறப்படுத்துவதற்கு தொடக்க போராட்டமாக இந்நாளை கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 

திமுக ஆட்சியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும். திருப்பூர் மாநகராட்சியில் 50 ரூபாய் மதிப்புள்ள துடைப்பத்தை 440க்கு தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சி நிர்வாகம் வாங்கி இருப்பதன் மூலம் மாநகராட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதுபோல அனைத்து வகையிலும் திமுக அரசு ஊழல் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...