'உங்களை தேடி யோகா' ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ - ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடாக 'உங்களை தேடி யோகா' என்ற தலைப்பில் ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: சர்வதேச யோகா தினத்தையொட்டி உங்களை தேடி யோகா' என்ற தலைப்பில் ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது.

சர்வதேச யோகா தினம்‌ வரும்‌ 21-ம்‌ தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்‌, இந்தியா முழுவதும்‌ உங்களை தேடி யோகா என்ற திட்டத்தை ஈஷா யோகா மையம்‌ முன்னெடுத்துள்ளது.

இதன்‌ மூலம்‌, பொதுமக்கள்‌ தங்கள்‌ இருப்பிடத்திலேயே நேரிலோ அல்லது ஆன்லைன்‌ வாயிலாகவோ இலவசமாக யோகா கற்றுக்கொள்ள முடியும்‌. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள்‌, அலுவலகங்கள்‌, குடியிருப்புகள்‌ உள்ளிட்ட இடங்களில்‌ குறைந்தப்பட்சம்‌ 15 பேர்‌ ஒன்றிணைந்தால்‌ ஈஷாவின்‌ யோகா பயிற்றுநர்கள்‌ நேரில்‌ வந்து யோகா கற்றுக் கொடுப்பார்கள்‌. 

இவ்வகுப்பில்‌, யோக நமஸ்காரம்‌, நாடி சுத்தி, ஈஹா க்ரியா போன்ற மிகவும்‌ எளிமையான அதேசமயம்‌ சக்திவாய்ந்த யோக பயிற்சிகள்‌ கற்றுக் கொடுக்கப்படும்‌. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன்‌ மூலம்‌ முதுகுதண்டும்‌ நரம்பு மண்டலமும்‌ வலுப்பெறும்‌, மன அழுத்தம்‌ குறையும்‌, உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும்‌.

உங்கள்‌ இருப்பிடத்தில்‌ யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள்‌ Isha.co/idysessionrequest என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. ஆன்லைன்‌ வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...