கோவை தடாகம் புறகாவல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன்!

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட தடாகம் புறகாவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.



கோவை: தடாகம் புறகாவல் நிலையம் திறப்பு விழாவில் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். 

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே துடியலூர், ஆனைக்கட்டி, பன்னிமடை, மருதமலை மற்றும் கோவை செல்லும் 5 வழியில் சாலைகள் உள்ளன. இந்த இடம் மிகவும் முக்கிய இடமாக இருப்பதால் தடாகம் காவல் நிலையம் சார்பில் கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே புறகாவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 



இதனை வி.கே.வி. குழும நிர்வாக தலைவர் மற்றும் நஞ்சுண்டபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ், பன்னிமடை ஊராட்சித்தலைவர் பி.எஸ்.எம்.ரத்தினம் மருதாசலம், ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பலரது உதவியுடன் புதிய புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டது. 



கணுவாய், சோமையனூர், ஆனைகட்டி சாலை பகுதிகள் வரை சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டு இந்த புறகாவல் நிலையத்தில் பார்க்கும்படி செய்யப்பட்டுள்ளது. 



கழிவறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த புறகாவல் நிலையத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்ததுடன் சி.சி.டி.வி கேமரா வேலை செய்யும் டிவியை பார்வையிட்டு நோட்டு புத்தகத்தில் கையெப்பமிட்டார்.



நஞ்சுண்டபுரம் ஊராட்சி தலைவர் கார்த்திகேஸ்வரி வி.கே.வி.சுந்தரராஜ், போக்குவரத்து ஆய்வாளர் வசந்தி, வி.கே.வி.சுந்தரராஜ், பி.எஸ்.எம்.மருதாசலம் உள்ளிட்டவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். 



இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன், துடியலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தடாகத்தில் இருந்து டி.என்.வேலுச்சாமி, ஆனந்தன், திமுக ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார், நஞ்சுண்டபுரம் ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, பன்னிமடை ஊராட்சி துணைத்தலைவர் அருள்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பாரதி செல்வம், முருகேஷ், இளையராஜா, மனோகரன், மோகன்ராஜ், கோபால்சாமி, டி.டி.எஸ்.மூர்த்தி, தனக்குமார், சோமையம்பாளையம் துரைசாமி, அகிலபாரத இந்துமகா சபா தேசிய ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், கணுவாய் தேவராஜ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். 

கலந்துக்கொண்ட அனைவரும் சிறப்பிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. 



இதற்கான ஏற்பாடுகளை தடாகம் எஸ்.ஐ ஆறுமுக நயினார், சிறப்பு போலீஸ் செல்லக்கண்ணு உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வி.கே.வி. குழுமத்தை சேர்ந்த மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...