துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம்


கோவை மாவட்ட தெற்கு மண்டலம் மற்றும் 76 முதல் 70 வரை உள்ள வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை அமைச்சர் பெயரைக் கூறிக் கொண்டு உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தரக்குறைவாக நடத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இதுபோன்று துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த போராட்டத்தின் போது துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...