பெண் பேருந்து ஓட்டுநர் விவகாரம் - தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் கூறுவது என்ன?

கோவை பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, திமுக எம்பி கனிமொழி வரும் தகவலை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருக்காது. அவர் இப்போதும் பணியில் தான் இருக்கிறார் என வி வி பஸ் சர்வீஸ் உரிமையாளர் துரை கண்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா தற்போதும் பணியில் தான் உள்ளார் என தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா வேலையில் இருந்து நிறுத்தப்பட்டது குறித்து விவி பஸ் சர்வீஸ் நிறுவன உரிமையாளர் துரை கண்ணன் கூறியதாவது,

ஷர்மிளா மற்றும் அவரது அப்பா இருவரும் வந்து கோபமாக பேசிவிட்டு நாங்கள் போகிறோம் என கூறிவிட்டு சென்றார்கள். அதுவரை எனக்கு என்ன விஷயம் என்றே தெரியாது. 

கனிமொழி வரும் பொழுது இது குறித்து என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாமே என்று தான் அவரிடம் நான் கூறினேன். தற்போதும் ஷர்மிளா பணியில் தான் உள்ளார், 

அவர் தான் பாதியில் இறங்கிச் சென்று விட்டார். நான் அவரது தந்தையை இதுவரை பார்த்தது கூட இல்லை, இன்று தான் பார்த்தேன். ஷர்மிளா வேலைக்கு சேரும்பொழுது பார்த்தேன் பிறகு இடையில் ஒரு முறை செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும் பொழுது பார்த்தேன்.

அடுத்தபடியாக இன்று தான் அவரை பார்க்கிறேன். எம்.பி. வரும் பொழுது முன்னாலேயே தெரிவித்து இருந்தால் இது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து இருக்காது என்று தான் அவரிடம் கூறினேன். 

வானதி சீனிவாசன் வந்ததும் எனக்கு தெரியாது இன்று கனிமொழி வந்ததும் எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...