உடுமலையில் ரஜேந்திரா ரோட்டில் வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்க சி.ஐ.டி.யு கோரிக்கை!

உடுமலை வார சந்தைக்கு எதிரே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்கள் நிறுத்தக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் கூறியதால், வாழ்வாதாரம் இழந்துள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள், மீண்டும் அதே இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது.



திருப்பூர்: உடுமலை அருகே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் வாரச்சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள ராஜேந்திரா ரோட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மினிடோர், டூரிஸ்ட் கார், வேன், டெம்போ உள்பட 100க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. எனவே வாகனங்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சி.ஐ.டி.யு சங்கத்தின் தலைமையில் ஒன்று சேர்ந்து உடுமலை நகர மன்ற தலைவர் மு.மத்தீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்தையில் ஏற்கனவே உள்ள அதே இடத்தில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்திக் கொள்வது என்றும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை சீராக முறைப்படுத்தி நிறுத்திக்கொள்வது என்றும் பேசி முறைப்படுத்தப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் CITU நிர்வாகிகள் தண்டபாணி, மதுசூதனன், பஞ்சலிங்கம், சுதா சுப்பிரமணியம்,இயேசு ராஜ், தோழர் ராஜா உள்பட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...