சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் - திருப்பூரில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி!

திருப்பூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாநகர காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் மற்றும் கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.சி.அரசு மேல்நிலை பள்ளியில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.



முன்னதாக மாணவர்கள் மத்தியில் போதை பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. 



தொடர்ந்து பேரணியை மாநகர காவல் ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



பேரணியில் போதை பொருளால் ஏற்பட கூடிய விளைவுகள் குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். 

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, உதவி ஆணையர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர்கள், கணேசன், சிவசங்கரி, உள்ளிட்ட காவலர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...