துடியலூரில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகள் சார்பில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை துடியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தொடங்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகள் சார்பில் உலக போதைப்பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் அறிவுறுத்தல்படி நடைபெற்ற இந்த பேரணியை துடியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தொடங்கி வைத்தார். 



இந்த பேரணியானது துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கி வடமதுரை, துடியலூர் காவல் நிலையம், சந்தை பகுதி வழியாக மீண்டும் பேருந்து நிறுத்தம் வந்தடைந்தது. இந்த பேரணியின் போது ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். 



மேலும் பொதுமக்களிடம், போதை பழக்கத்தால் உடல் நலம், மன நலம், குடும்ப நலம், சமூக நல பாதிப்புகள் மற்றும் தொழில், பொருளாதார பாதிப்புகள் ஏற்படுதாகவும், சட்டப்பிரச்சனைகள் வருவதாகவும் கூறி போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்தான நோட்டீஸ்களையும் விநியோகம் செய்தனர். 

இந்த பேரணியில் துடியலூர் சிறப்பு துணை ஆய்வாளர்கள் சரவணன், சின்னராஜ், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி என்.எஸ்.எஸ் தலைவர் கேசவசாமி, என்.எஸ்.எஸ் ஆசிரியர்கள் மாரியப்பன், ஜெயபிரகாஷ், ஸ்ரீஜா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ் ஆசிரியர்கள் கார்த்தி, வினோ, கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு இயக்க ஆசிரியர்கள் பூபால்ராஜ், வெங்கடேஷ், சந்தோஷ், அசோக் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...