கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் - திருப்பூர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மனு!

திருப்பூர் மாநகராட்சிக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதை கண்காணித்து ஆய்வு செய்து தடுப்பதற்கு மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூருக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கேரள அரசு கட்டும் அணையை தடுக்க கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். 

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 21 பேர் மாநகராட்சி ஆணையர் பவன் குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 



அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக உள்ள பில்லூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கின்ற விதமாக கேரளா அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதை கண்காணித்து ஆய்வு செய்து தடுப்பதற்கு அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க வலியுறுத்தி கடந்த மாமன்ற கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்த புள்ளி விபரத்தில் முழுமையான விதிமுறைகளை அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களை ஏற்கனவே பணிபுரிந்து வரும் அந்தந்த பகுதிகளிலேயே பணியில் அமர்த்த வேண்டும், மாநகராட்சி 45 வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...