பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை - மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி கருத்து!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக அனைத்து அணிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை, அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.



கோவை: பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி தெரிவித்துள்ளார். 



மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பல்வேறு அணிகளின் கூட்டம் நடைபெற்றது. 



இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 



இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் கனகசபாபதி, ஜி.கே.செல்வகுமார், விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறும் விதமாக கடந்த ஒரு மாதமாக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான வரவேற்பும் ஆதரவும் அதிகமாகியுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் துவங்கியுள்ளனர். 

ஆளும் திமுக குடும்ப ஊழல் ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைய மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை ஒவ்வொரு மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறோம். 

தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் பிகாரில் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை, அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் அனைத்து ஊழல் கட்சிகளும் குடும்பக் கட்சிகளும் சேர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் ஒற்றுமையாக நிற்க முடியாது.

தற்காலிக பலனுக்காக மட்டுமே அவர்கள் இந்த ஒற்றுமையை வெளிக்காட்டி வருகின்றனர். இவர்களால் ஒற்றை தலைமையிலான பிரதமர் வேட்பாளரின் கீழ் பணி செய்ய முடியாது. இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர், கூட்டணிக்கு யார் தலைவர் என தீர்மானிக்க முடியவில்லை. 

இந்தியா பல்வேறு விதத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது பல்வேறு பிரச்சனைகளும் உள்ளது. இதை சரி செய்ய சிறப்பான தலைமையை கொண்டுள்ள பாரத பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினரால் முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...