பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்!

பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு போக்குவரத்து போலீஸாரை நியமித்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 26 ஆவது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை: பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டுமென கவுன்சிலர் சித்ரா மனு அளித்துள்ளார்.

கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) மதிவாணனிடம், மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

பீளமேடு ரயில்வே மேம்பாலத்தை சுற்றி எல்லைத் தோட்டம், முருகன் நகர், ஹட்கோ காலனி, காந்திமாநகர், வி.கே.ரோடு, கருப்பண்ண கவுண்டர் லே அவுட் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. 

இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக இப்பகுதி மக்கள் மற்றும் அலுவலகங்கள். கல்லூரிகள், பள்ளிகள் என அன்றாட பணிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்த பாலத்தில் லாரிகள், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் செல்கின்றன. 

இதனால் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...